லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட குன்றத்தூர் கமிஷனரின் வங்கி லாக்கரில் கட்டு கட்டாக ரூ.33 லட்சம் பறிமுதல்..!

குன்றத்தூர் நகராட்சியில் வீடு கட்டுவதற்காக திட்ட வரைபட அனுமதிக்காக ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் முனுசாமியிடம் ரூ 24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி கமிஷனர் குமாரி அலுவலக உதவியாளர் குண்டு சாம்சன் ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட குமாரியின் வீட்டில் அன்றைய தினமே ரொக்க பணமாக 5 லட்சத்து 50 ஆயிரம் கைப்பற்றினர். மேலும் வங்கி லாக்கரின் 3 சாவிகளை கைப்பற்றினர். கோர்ட் உத்தரவுபடி வங்கி லாக்கரை திறக்க அனுமதி பெற்று சோதனை இட்டனர். சோதனையில் கட்டு கட்டாக ரூ 33 லட்சம் இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். கமிஷனர் குமாரி ஜெயிலில் இருந்தும் நான் எதற்கும் கவலைப்பட மாட்டேன் தினசரி கறி சோறு தான் வேண்டும் என அடம் பிடிக்கிறார். குண்டு சாம்சன் அழுது கொண்டே இருக்கிறார்.