கோவை வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து கொள்ளை முயற்சி – நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை சுந்தராபுரம் சிட்கோ பொள்ளாச்சி ரோட்டில் எஸ்.பி.ஐ .வங்கி உள்ளது. இங்கு மேனேஜராக பணி புரிந்து வருபவர் ராஜ்குமார் (வயது 36) இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வங்கியை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.நேற்று காலையில் வங்கியின் உதவி மேனேஜர் வங்கிக்கு வந்தார். அப்போது வங்கியின் ஜன்னல் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்தார் .இது குறித்து வங்கி மேலாளர் ராஜ்குமாருக்கு தகவல் கொடுத்தார். அவர் பார்த்தபோது ஜன்னல் கம்பி ஆக்சா பிளேடால் அறுக்கபட்டிருப்பது தெரிய வந்தது .இது குறித்து ராஜ்குமார் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள்.லாக்கரில் இருந்த நகை- பணம் எதுவும் கொள்ளை அடிக்கப்படவில்லை .அங்கு உள்ள சிசிடிவி கேமரா மூலம் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.