ரூ 25 லட்சம் பணம், ஆடி கார் கேட்டு மனைவிக்கு வரதட்சணை கொடுமை- கணவர் உட்பட 5 பேர் மீது புகார்..!

கோவை கணபதி கொங்கு நகர் 6 -வது வீதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மகள் விஷ்ணு பிரியா (வயது 25) இவருக்கும் பீளமேடு, நவ இந்தியா பகுதியை சேர்ந்த பத்மநாபன் மகன் லட்சுமி நாராயணன் (வயது 26) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது . திருமணத்தின் போது விஷ்ணுபிரியா வீட்டில் 100 பவுன் நகையும் 25 கிலோ வெள்ளி சாமான்களும் வரதட்சணையாக வழங்கப்பட்டது .இந்த நிலையில் கணவர் லட்சுமி நாராயணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மனைவி விஷ்ணு பிரியாவிடம் ரூ.25 லட்சம் பணம், ஆடி காரும் பெற்றோர்களிடம் வாங்கி வருமாறு கூறி கொடுமைப்படுத்தினார்களாம். மேலும் அவரது கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவிக்கு செக்ஸ்டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விஷ்ணு பிரியா கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி விசாரணை நடத்தி கணவர் லட்சுமி நாராயணன், மாமனார் பத்மநாபன், மாமியார் தனலட்சுமி, உறவினர்கள் பங்கஜம் பொன் சங்கர் ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ,வரதட்சணை கொடுமை ,உட்பட 3 பிரிவின் கீழ்வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.