காரமடை அருகே நடு ரோட்டில் கார் தாறுமாறாக ஓடி2பேர் பலி …

மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள ஜடையம் பாளையம் புதூரை சேர்ந்தவர் சந்திரசேகரன் ( வயது 53)இவர் நேற்று அவரது காரை ஓட்டிக்கொண்டு மேட்டுப்பாளையம்- கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தார்..குட்டையூர் பகுதியில் சென்றபோது கார் திடீரென்று நிலை தடுமாறி எதிரே வந்த பைக் மீது மோதியது. பின்னர் ஒரு ஸ்கூட்டி மீது மோதியது. இதில் பைக் ஓட்டி வந்த கூடலூர், காசி வயல்பகுதியைச் சேர்ந்த சாஜி மகன் சேர்ந்த அஸ்வின் ஹாஜ் ( வயது 23)அதே இடத்தில் இறந்தார். ஸ்கூட்டியில் வந்த மேட்டுப்பாளையம், பங்களா மேட்டை சேர்ந்த பிரசாந்த் ( வயது 28 ) படுகாயம் அடைந்தார் .பின்னர் கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் உள்ளதடுப்பு சுவரில் மோதியது. இதில் கார் ஓட்டி வந்த சந்திரசேகரன் பைக்கில் வந்த அஸ்வின் ஹாஜ் ஆகியோர் அதே இடத்தில் இறந்தனர். ஸ்கூட்டி ஓட்டி வந்த பிரசாந்த் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜசேகரன்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.