கோவை நகை வியாபாரியிடம் ரூ82 லட்சம் தங்கம் மோசடி,..

செல்வபுரம் சொக்கம்புதூர் ரோட்டில் உள்ள கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் சரவணா (வயது 49) நகை மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.இவரிடம்சாமியார் புது வீதியைச் சேர்ந்த விஸ்வநாதன் ( வயது 47) என்பவர் நகைக்கடை தொடங்க உள்ளதாகவும், அதற்கு தங்க கட்டிகள் தேவை என்று கூறினார் .இதை நம்பிய சரவணன் விஸ்வநாதனிடம் 1362.81 கிராம் தங்க கட்டிகளை கொடுத்தார்.ஆனால் விஸ்வநாதன் நகைக்கடை திறக்கவில்லை.இந்த நிலையில் தான் கொடுத்த தங்கத்தை சரவணா திருப்பி கேட்டார் .அவர் கொடுக்காமல் மோசடி செய்து விட்டார். இதன் மதிப்பு ௹ 82. லட்சம் இருக்கும்.இது குறித்து சரவணன் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விஸ்வநாதன் மீது மோசடி உட்பட இருபிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.