கோவில் அருகே சீட்டாட்டம். 7 பேர் கைது…

கோவை மாவட்டம் ஆழியார் பக்கம் உள்ள மஞ்ச நாயக்கனூரில் அருள்மிகு மாரியம்மன் கோவில் உள்ளது .இந்த கோவில் அருகே நேற்று சிலர்பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆழியார் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் அங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போதுபணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே ஊரை சேர்ந்த ராஜசேகர் (வயது 37) ஆறுச்சாமி ( வயது 60) செல்வம்( வயது 56 ) சண்முகம் ( வயது 58) லட்சுமணன் (வயது 49) செல்வராஜ் (வயது 48 )மகேந்திரன் ( வயது 42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ 6,070 பறிமுதல் செய்யப்பட்டது.