திமுக மகளிர் அணி சார்பில் குஷ்பூ மீது கோவை காவல் நிலையத்தில் புகார்.!!

கோவை மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் அன்னம்மாள் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குஷ்பு மீது ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-தமிழக அரசால் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் ரூ 1000 மிகவும் உதவியாக உள்ளது .இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை வாங்குபவர்களை பா.ஜ.க. நிர்வாகியான குஷ்பூ இழிவுபடுத்தி பேசியது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.