15 வயது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: கோவையில் 16 வயது மாணவர் மீது போக்சோ வழக்கு

15 வயது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: கோவையில் 16 வயது மாணவர் மீது போக்சோ வழக்கு

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிகோணம்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் 9 ம் வகுப்பு படித்து வரும் 15 வயதான மாணவிக்கும் நட்பு ஏற்பட்டு வந்தது. காதலிப்பதாக கூறி அந்த மாணவியை மாணவர் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றார். மாணவியின் வீட்டில் யாருமில்லாத போது அங்கே சென்று மாணவியிடம் பேசி உள்ளதாக தெரிகிறது. மாணவியை மிரட்டி வற்புறுத்தி அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்து உள்ளார். இது தொடர்பாக மாணவி தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாணவர் மீது கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்தனர், மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.