கோவையில் வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்: பெண் தரகர் கைது – அழகிகள் 3 பேர் மீட்பு..!!

கோவை சலீவன் வீதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கடைவீதி போலீசுக்கு நேற்று இரவு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ், சப் இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பெண்களை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பெண் தரகர் துளசி என்ற தனலட்சுமி (வயது 35)கைது செய்யப்பட்டார். அங்கிருந்த சிவானந்தா காலனி முத்து, எல்.ஐ.சி காலனி சுமதி, வெள்ளலூர் பர்வீன் பாபி’ஆகியோர் மீட்கப்பட்டு பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.