கோவை மாரியம்மன் கோவில் திருவிழாவில் மோதல்: வாலிபருக்கு கத்திக்குத்து – 2 பேர் கைது..!

கோவை புலியகுளம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் . இவரது மகன் பிரசாந்த் (வயது 22) கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்குள்ள அலங்கார மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது பிரசாந்துக்கும் அதே பகுதியை சேர்ந்த 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக பிரசாந்த் நேற்று அங்குள்ள சிறு காளியம்மன் கோவில் வீதியில் நடந்து சென்றார். அப்போது 2 பேர் அவரை வழிமறித்து கத்தியால் குத்தினார்கள். இதில் பிரசாந்த் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் .இது குறித்து அவர் தாயார் புஷ்பராணி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து புலியகுளம் அந்தோனியார் வீதியைச் சேர்ந்த சார்லஸ் ( வயது 29) பரத் குமார் ( வயது 19) ஆகியோரை கைது செய்தனர் .இவர்கள் மீது கொலை முயற்சி உள்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.