வீட்டில் விபசாரம்… பெண் தரகர் கைது – வெளிமாநில அழகிகள் மீட்பு..!

கோவை துடியலூர் என். ஜி. .ஜி. ஓ காலனி, அசோகாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக துடியலூர் போலீசுக்கு தகவல் வந்தது . இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதை நடத்தி வந்த சரவணம்பட்டி அண்ணா நகரை சேர்ந்த பெண் தரகர் மகேந்திரன் ( வயது 33) கைது செய்யப்பட்டார். இவருடைய  சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பக்கம் உள்ள ஆவாரம்பட்டி ஆகும். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்த மேற்கு வங்க அழகி அஸ்மிரா ,பெங்களூரு அழகி சௌமியா ஆகியோர் மீட்கப்பட்டு பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்..