தனியார் பஸ் கண்ணாடி உடைப்பு : டிரைவருக்கு கொலை மிரட்டல் – போதை ஆசாமிக்கு வலை.!!

கோவை: மேட்டுப்பாளையம் பாக்குக்கார தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 48) இவர் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு தனியார் பஸ்சை ஓட்டி வந்தார். கவுண்டம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே வந்த போது அந்த வழியாக குடிபோதையில் பைக்கில் வந்த ஒரு ஆசாமி பஸ்சை நடுரோட்டில் தடுத்து நிறுத்தினார். பின்னர் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கல்லால் உடைத்து சேதப்படுத்தினார். பின்னர் டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு பைக்கில் தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து டிரைவர் செந்தில்குமார் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் சந்திரமூர்த்தி வழக்கு பதிவு செய்து பஸ் மீது கல் வீசி தாக்குதல் நடத்தி, டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகிறார். இவர் மீது தகாத வார்த்தைகளால் பேசுதல், கொலை மிரட்டல், சேதப்படுத்துதல், உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..