தனியார் ஆம்புலன்ஸ் வேன்,பள்ளிக்கூட பஸ் மோதி 2 பேர் பரிதாப பலி..

கோவை சித்தாபுதூர் ரவீந்திரநாத் தாகூர் லேஅவுட் டை சேர்ந்தவர் முருகேசன் (வயது 57) இவர் நேற்று சங்கனூர், கண்ணப்ப நகர் பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்றார் . அப்போது அந்த வழியாக வேகமாக வந்த தனியார் மாருதி ஆம்புலன்ஸ் வேன் இவர் மீது மோதியது. இதில் முருகேசன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரோஜா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக அன்னூர், மசக்கவுண்டன் செட்டி பாளையத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் சுரேஷ் ( வயது 39) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரிடம் காலாவதியான லைசென்ஸ் இருந்தது. இதை யடுத்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

இதே போல துடியலூர் பக்கம் உள்ள பன்னிமடை, டான்போஸ்கோ நகர் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 53) இவர் அவரது வீட்டின் முன்நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு திரும்புவதற்காக பின்னோக்கி வந்த தனியார் பள்ளிக்கூட பஸ் அவர் மீது மோதியது. இதில் தமிழ்ச்செல்வன் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பநாய்க்கன்பாளையத்தை சேர்ந்த பள்ளிக்கூட பஸ் டிரைவர் ரமேஷ் ( வயது 50) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..