குடிசை மாற்று வாரியம் சார்பாக ஊரார்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடு என ஏமாற்றி ரூ 88 லட்சத்து 40 ஆயிரம் ஏமாற்றிய கேடி லட்சுமி கைது…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எப்படி ஏமாற்றி கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கலாம் என்று ஆய்வு செய்தால் பிஎச்டி பட்டம் பல்கலைக்கழகத்தில் பெற்றுவிடலாம் அந்த அளவிற்கு தமிழகம் சிக்கி சின்னாபின்னம் ஆகிவிட்டது
ஆவடி போலீஸ் கமிஷனர் கி. ஷங்கரை மக்கள் குறை கேட்குகும் முகாமில் பூத்த பேடு மெயின் ரோடு அன்னை சத்யா நகர் நாராயணசாமியின் மகன் கௌதமன் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது சென்னை ராமாபுரம் நாயுடு தெருவை சேர்ந்த வேணுகோபால் மகன் சுப்ரமணி குமணன்சாவடியை சேர்ந்த செல்வம் அம்பத்தூரை சேர்ந்த நித்யா லட்சுமி ஆகியோர் சேர்ந்து கொண்டு கௌதமனிடம் குடிசை மாற்று வாரிய வீடுகளை பெற்று தருவதாகவும் அதற்காக அரசாங்கத்திற்கு முன் பணமாக ரூபாய் 85 ஆயிரம் செலுத்த வேண்டும் அங்கு உயர் அதிகாரிகள் நட்பு தாறுமாறாக உள்ளது என கௌதமனிடம் மற்றும் 104 நபர்களிடம் மொத்தமாக ரூபாய் 88 லட்சத்து 40 ஆயிரத்தை பணமாக பெற்றுக்கொண்டு கௌதமனிடம் மற்றும் 104 நபர்களிடம் போட்டோ கைரேகை மற்றும் கண் விழிகளை பதிவு செய்து கொண்டு வேனில் ஏற்றி தாம்பரம் அடுத்த படப்பை பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளை காண்பித்து உங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகள் தான் இது என்று கூறி அரசு முத்திரையுடன் கூடிய போலி ஒதுக்கீடு சீட்டை காண்பித்து கொடுத்துள்ளார் கௌதமனும் மற்றும் 104 பேரும் வீடு கிடைத்து விட்ட சந்தோஷத்தில் குடி போக நினைத்தனர் ஆனால் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தனர் அவரது உத்தரவின் பெயரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் போலி ஆவண தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆல் பின் பிரிட்ஜி ட் மேரி வழக்கு பதிந்து கேடிகளில் ஒருவளான லட்சுமி வயது 43. கணவன் பெயர் ஜெபஸ்டின் 54 வது குறுக்கு தெரு மணலி புதுநகர் சென்னை என்பவளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டடாள்