அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு..சிவசேனா வேண்டுகோள்.

அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 5 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியருக்கான அரையாண்டு தேர்வுகளை டிசம்பரில் நடத்த மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தியது. தொடர் மழையின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வுகால் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது அதன்படி +1, +2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு டிச.7 -டிச. 22ம் தேதி வரையும், 6-10 ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.11- டிச.21 ம் தேதி வரையும் நடைபெற்றது. பல பள்ளிகளில் இன்றுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தது.

அந்த வகையில் கடந்த 23ஆம் தேதி முதல் 9 நாட்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று (02-01-2024) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. வெள்ளம் பாதித்த நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் ஜனவரி 4 முதல் 11ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.