வீட்டில் பணம் வைத்து சீட்டாட்டம் – 9 பேர் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள மோதிராபுரத்தில் ராஜன் என்பவரது வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் ( வயது 62) லோகநாதன் (வயது 49) காமராஜ் (வயது 35) ரவி ( வயது 25) ஜெயராம் (வயது 38) வெள்ளியங்கிரி (வயது 60) ராதாகிருஷ்ணன் (வயது 48) ஜெயப்ரகாஷ் (வயது57 )ஆகியோர் கைது செய்ய பட்டனர். சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட பணம் ரூ.5,010 பறிமுதல் செய்யப்பட்டது.