பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிக் கொல்ல முயற்சி – ஒருவர் கைது..!

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள அம்பராம்பாளையத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார் இவரது மகன் நவீன் குமார் ( வயது 21 )பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலையில் பங்குக்கு ஒருவர் பெட்ரோல் போட வந்தார். பெட்ரோல் போட்டு விட்டு பணம் கொடுக்க மறுத்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது .இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் நவீன் குமாரை தாக்கி காயப்படுத்தினார். அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது .இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த ஆசாமியை கைது செய்தனர். விசாரணையில் அவர் ஆனைமலை அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் ( வயது 36) என்பது தெரியவந்தது .இவர் மீது 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது .இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..