பாலியல் தொல்லை புகாரில் மாணவியை தொடர்ந்து மிரட்டிய 10 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி.யிடம் பெற்றோர் மனு.!!

கோவை ஆலாந்துறை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து  வரும் மாணவிக்கு அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பாலியல் சிண்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே அந்த மாணவியின் பெற்றோர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனை சந்தித்து நேற்று ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- எனது மகள் படித்து வரும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பாலியல் சீண்டல் செய்தது தொடர்பாக புகார் கொடுக்க கூடாது என்று 10 ஆசிரியர்கள் எனது மகளை மிரட்டினார்கள். தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். ஆனால் இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனது மகளை தொடர்ந்து மிரட்டி வரும் இந்த 10 ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது..