பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.38.48 லட்சம் வசூல்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு கடந்த ஏப் 5 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை 6 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய பணத்தை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. முன்னதாக கோயில் துணை ஆணையர் மேனகா, பவானி சங்கமேஸ்வரர் கோவில் துணை ஆணையர் சுவாமிநாதன் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டது. ராஜன்நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள், கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் மொத்தம் ரூ.38 லட்சத்து 48 ஆயிரத்து 148  ரொக்கமும், 147 கிராம் தங்கமும், 386 கிராம் வெள்ளியும் இருந்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.