திருச்சியில் ஓபிஎஸ்-ன் முப்பெரும் மாநாடு… அதிமுக தலைமை அலுவலகம் போல் மேடை அமைப்பு..!

திருச்சியில் நடைபெறும் மும்பெரும் விழாவிற்கான மாநாட்டு மேடையானது சென்னையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகம் போன்று அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் ஓபிஎஸ் அணி சார்பில்,எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா – அதிமுக 51 வது ஆண்டு விழா என முப்பெரும் விழா மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது.

இதற்காக பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு 20000 தொண்டர்கள் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. இரவை பகலாக்கும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மைதானம் முழுவதும் பிளக்ஸ் பேனர், கொடிகள் கட்டப்பட்டுள்ளது.

மாநாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள மேடையானது சென்னை அதிமுக தலைமை அலுவலகம் போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகை என்ற பெயர் அச்சிடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஓபிஎஸ் தனது அணி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார். திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள தனியார் ஓட்டலில் ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும். இந்த ஆலோசனை கூட்டத்தில், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், JCT பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.