பூந்தமல்லி குமணன்சாவடி மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழா 2000 பேருக்கு பக்கெட் பிரியாணி இலவச சேலைகள்…

பூந்தமல்லி முன்னாள் நகராட்சி மன்ற தலைவர் பூவை ஞானத்தின் மகன் டாக்டர் ஜி. பிரேம்குமார் குமணன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு 107 வது பிறந்தநாளை ஒட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பூந்தமல்லி குமணன்சாவடி மாங்காடு சாலையில் உள்ள ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் அருகே பிரம்மாண்டமான எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு பூந்தமல்லி நகராட்சி முன்னாள் தலைவர் பூவை எம். ஞானம் மாலை அணிவித்து கற்பூர ஆரத்தி எடுத்து காண்பித்தார் 2000 பெண்களுக்கு இலவச சேலைகள் 2 ஆயிரம் பேருக்கு பக்கெட் பிரியாணி இலவசமாக வழங்கினார்.