ஓய்வு பெறும் நாளில் அதிகரட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடை நீக்கம்..!

ஊட்டி அருகே உள்ள அதிகரட்டி பேருராட்சி செயல் அலுவலா் ஜெகநாதன் பணி ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேருராட்சி செயல் அலுவலராகப் பணியாற்றியவா் ஜெகநாதன். இவா் சில மாதங்களுக்கு முன் கோவை தொண்டாமுத்தூரில் இருந்து மாறுதலாகி ஊட்டிக்கு வந்தாா். இந்த நிலையில் நேற்று அவா் பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக இருந்தது. இந்நிலையில் அவா் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் ஜெகநாதன் பணியாற்றியபோது அங்கு லே அவுட் அமைக்க விதிமுறை மீறி அனுமதி கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில் கோவை கலெக்டர் பரிந்துரையின் பேரில் இவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தலைமைச் செயலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது.