நகை பட்டறையில் தங்கம் திருடிய தொழிலாளி கைது…

கோவை ஆர். எஸ். புரம், வெங்கடசாமி ரோட்டை சேர்ந்தவர் சிமிதிஷ் (வயது 35)அங்குள்ள வடக்கு சம்பந்தம் ரோட்டில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் சொக்கம்புதூர் பிருந்தா லேகோட்டை சேர்ந்த சுந்தரமூர்த்தி ( வயது 48) என்பவர்கடந்த 8 மாதமாக நகை தொழிலாளியாகவேலை பார்த்து வந்தார். இவர் பட்டறையில் இருந்த 40 கிராம் தங்கத்தை நைசாக திருடியதாக கூறப்படுகிறது .இது குறித்து ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிவு செய்து சுந்தரமூர்த்தியை நேற்று கைது செய்தார் .இவரிடமிருந்து30 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது..