நடமாடும் கஞ்சா வியாபாரி கைது – 2 கிலோ கஞ்சா பறிமுதல்..!

கோவை சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையம் பகுதியில் வட மாநில வாலிபர் ஒருவர் அங்குள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் வாசிகளுக்கு நடந்து சென்றே கஞ்சா விற்பனை செய்வதாக சூலூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.இதையடுத்து இன்ஸ்பெக்டர் மாதையன் காங்கேயம் பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் மாறுவேடத்தில் கண்காணித்தார். அப்போது ஒரு வாலிபர் பஸ் ஏற நின்று கொண்டிருந்த ஒருவரிடம் மறைத்து வைத்து கஞ்சா விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை சோதனை செய்த போது அவரிடம் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஷிவ் குமார் ஷஹானி ( வயது 35)என்பது தெரிய வந்தது .இவர் வட மாநிலத்திலிருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்துகாங்கேயம் பாளையத்தில்தங்கி இருந்து கஞ்சா வியாபாரம் செய்துவந்தது விசாரணைகள் தெரிய வந்தது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..