கல்லூரிகளில் கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது.!!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு வடமாநில வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் நேற்று கனியூர் டோல்கேட் பகுதியில் கண்காணித்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது . விசாரணையில் அவர் ஒடிசாவை சேர்ந்த சுனில் லுகா ( வயது 23) என்பது தெரிய வந்தது . இவர் அந்த பகுதியில் வீடு எடுத்து தங்கியிருந்து வட மாநிலங்களில் இருந்து கஞ்சா வாங்கி வந்து கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு நேரடியாக சென்று விற்பனை செய்தது தெரியவந்தது. இவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்..