கஞ்சா சிகரெட் விற்பனை செய்த வடமாநில வாலிபர் கைது..!

கோவை : ஒடிசாவை சேர்ந்தவர் மன்னர் ரஞ்சன் சுனா ( வயது 23) இவர் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நூற்பமில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.இவர் கஞ்சா சிகரெட் விற்பனை செய்வதாக அன்னூர் போலீசுக்கு தகவல் வந்தது..அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா இவரது நடவடிக்கைகளை கண்காணித்தார்.இவர் நேற்று அங்குள்ள நூற்புமில் அருகே நின்று கொண்டு கஞ்சா சிகரெட் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 1900 கிராம் எடை கொண்ட கஞ்சா சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது..