செல்போனை தட்டிவிட்டு பறித்து செல்லும் கல்லூரி மாணவர்கள்…போலீசில் பிடியில் சிக்கினர்.!!

கோவையில் நடந்து செல்பவர்களிடம் செல்போனை தட்டி விட்டு பறித்து செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது.இதை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.இந்த நிலையில் ஹட்கோ காலனி பகுதியில் நேற்று இதே போல செல்போன் பறிப்பு சம்பவம் நடந்தது..பீளமேடு போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்தனர்.இதில் இந்த வழிப்பறியை கோவையில் உள்ள 2 கல்லூரிகளில் படித்து வரும் 4 மாணவர்கள் நடத்தியது தெரியவந்தது.இவர்கள் இன்று காலையில் போலீஸ் பிடியில் சிக்கினார்கள். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.