வடமாநில தொழிலாளி அடித்துக் கொலை – கோவையில் பரபரப்பு..!

கோவை அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் இன்று காலையில் ஒருவர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்தது. இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சவுத்ரி ( வயது 38) என்பது தெரியவந்தது. இவரை யாரோ முன் விரோதம் காரணமாக அடித்துக் கொலை செய்திருப்பாக சந்தேகிக்கபடுகிறது. இது குறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வட மாநில தொழிலாளி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..