திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை சிங்காநல்லூர், அஸ்தாந்த நாயக்கர் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் .இவருக்கும் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பக்கம் உள்ள அழிச்சி குளம் கிராமத்தைச் சேர்ந்த சாமுண்டி மகள் சாமிளிக்கும் (வயது 21) கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தாயாருக்கு போன் செய்து தனது மாமியாரும், கணவரும், கணவரின் தம்பியும் சேர்ந்து தனக்கு டார்ச்சர் கொடுப்பதாக தொலைபேசியில் கூறினார் .இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது தந்தை சாமுண்டி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.