கோவை கார் வெடிப்பு சம்பவம் நடந்து 12 மணி நேரத்திலேயே இயல்புநிலை திரும்பியது-செந்தில் பாலாஜி பேட்டி..!!

கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில் 12 மணி நேரத்தில் இயல்பு நிலை திரும்பியது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையரை சந்தித்த பிறகு அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவையில் பொதுமக்கள் அச்சமின்றி தீபாவளி கொண்டாடினர். சிலர் குறுகிய மனப்பான்மையுடன் கோவை சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கின்றனர் என கூறினார். கோவையில் ஏதோ பதற்றம் நிலவியது போல் சிலர் செய்தி வெளியிடுவதற்கு அமைச்சர் கண்டனம் தெரிவித்தார்.