கேரளாவில் நிபா வைரஸ் எதிரொலி… கோவை எல்லைப் பகுதியில் வாகனச் சோதனை தீவிரம்..!

கோவை: கேரளாவில் இருந்து வரும் மக்களுக்கு உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படுகிறது. பேருந்துகளில் வரும் மக்களும் சோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் கோவையில் எங்கு செல்கின்றார்கள் என்ற விவரங்களை அதிகாரிகள் சேகரித்தனர்.

கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு தாய் மற்றும் குழந்தைகள் உயிரிழந்திருப்பது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் கேரளாவில் நிபா வைரஸ் தாக்கப்பட்டு பலர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் அங்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருவது அனைத்து மக்களிடையேயும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு-கேரளா எல்லைப்பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கேரள எல்லை பகுதியான வாளையாறு சோதனை சாவடியில், கேரளாவில் இருந்து வரும் மக்களுக்கு உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படுகிறது. மேலும் பேருந்துகளில் வரும் மக்களும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.