கோவையில் 23 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று திடீர் சோதனை… ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பா..?-வீடியோ இணைப்பு.!!

கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் கடந்த ஆண்டு நடந்த கார் வெடிப்பு வழக்கில் ஒருவர் பலியானார் . இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 6 பேரை கைது செய்தனர்.இறந்தவர் வீட்டில் நடத்திய சோதனையில் ஏராளமான வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு ( என். ஐ. ஏ) தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் மேலும் சிலரை கைது செய்தனர். கோவையில் மேலும் சிலருக்கு இந்த வழக்கில் ஐ எஸ் ஐ எஸ் தொடர்பு இருப்பதாக கருதப்பட்டது. இதையடுத்து கோவை மாவட்டத்தில் 23 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது..