கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் (SBI) பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் (SBI) பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

இந்நிகழ்ச்சி மேட்டுப்பாளையம்
பாரத ஸ்டேட் வங்கி கிளை முதன்மை மேலாளர் வனிதா தலைமையில் நடைபெற்றது

பாரத ஸ்டேட் வங்கி
கள மேலாளர் குண பிரகாஷ் முன்னிலை வகித்தார்
பாரத ஸ்டேட் வங்கி பிரியதர்ஷினி, மேட்டுப்பாளையம் நகராட்சி உதவி நகரத் திட்டமிடல் அலுவலர் ஜெயவேல் மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி
சமுதாய அமைப்பாளர் சுஜிகுமாரி மற்றும் சூர்யா மற்றும்
பாரத ஸ்டேட் வங்கி சேவை
மையம் முனியப்பன் ஆகியோர் பங்கு பெற்றனர்

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் ஆலோசனைக் கூட்டத்தில் மேட்டுப்பாளையம் தாலுகா
சிஐடியு தொழிற்சங்கத்தினர் மற்றும் சாலை ஓர வியாபாரிகள் கலந்து கொண்டனர்

கடன் வழங்கும்
ஆலோசனை கூட்டத்தில் முன்பே கடன் பெற்று திருப்பி செலுத்தி வர்த்தகம் செய்யும் சாலை ஓர வியாபாரிகளுக்கு க்யூ ஆர் (QR) கோடு அட்டை வழங்கப்பட்டது

அனைத்து பொதுமக்களுக்கு உரிய இன்சூரன்ஸ் பயன்பாடு குறித்து விளக்கி கூறப்பட்டது

ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட சாலையோர வியாபாரிகள் கடன் வாங்குவதில் ஏற்படும் குறைகள் சேமிப்பு கணக்குகள் குறித்த தங்கள் சந்தேகங்களையும், கருத்துக்களையும் தெரிவித்தனர்