நாடு முழுவதும் கடந்த 3ஆம் தேதி இளநிலை நீட் தேர்வுகள் நடைபெற்றது. தற்போது இந்த தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வு வினாத்தாள் முன்னதாகவே கசிந்ததால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை வெடித்தது.
இது தொடர்பாக தற்போது தேசிய தேர்வு முகமை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. மேலும் இதன் காரணமாகவே இளநிலை நீட் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ கனவுக்காக தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









