இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றக்கூடிய திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்- முதலமைச்சர் ஸ்டாலின் உரை..!

சென்னை: இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றக்கூடிய திட்டமாக நான் முதல்வன் திட்டம் உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏற்றமிகு 7 திட்டங்களின் கீழ் புதிய திட்டங்கள் தொடக்க விழாவில் முதலமைச்சர் உரையாற்றினார். தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் போது பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினேன். நான் முதல்வன் திட்டத்தை கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி வைத்தேன் என முதல்வர் கூறினார்.