ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சியின் பொருளாளர் மற்றும் அவரது சகோதரர் படுகொலை..

ரோடு கிழக்கு தொகுதி கிருஷ்ணசாமி வீதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் மற்றும் கௌதம் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் வீட்டில் மசாலா பொடி, தேன் மற்றும் செக்கு எண்ணெய் போன்ற பொருட்களை வீட்டில் வைத்து தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். இதில் கார்த்திகேயன் என்பவர் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் பொருளாளராக இருக்கிறார். இந்நிலையில் மாணிக்கம் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகசாமி என்பவர் நேற்று கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று கார்த்திகேயன் மற்றும் கௌதம் ஆகிய இருவரை பேசுவதற்கு வருமாறு வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது ஆறுமுகசாமி திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கௌதம் மற்றும் கார்த்திகேயன் இருவரையும் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் அண்ணன் தம்பி இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் மறைவுக்கு தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நாம் தமிழர் கட்சியின் பொருளாளராக 22 வயதில் சிறப்பான முறையில் செயல்பட்டு வந்த தம்பி கார்த்திகேயன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.

இரு பிள்ளைகளையும் இழந்து தவிக்கும் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது சொல்வதென்றே தெரியவில்லை. மேலும் கார்த்திகேயன் மற்றும் கௌதம் இருவரையும் கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருவரின் மறைவுக்கும் கண்ணீரோடு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.