வருமான வரி அலுவலக பெண் ஊழியர் திடீர் மாயம்…

கோவை புது சித்தாபுதூர் சி.கே. காலனியில் உள்ள வருமானவரி அலுவலர் குடியிருப்பில் வசிப்பவர் முத்துக்குமார்.இவரது மனைவி இலக்கியா ( வயது 33 )வருமான வரி அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார் கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இலக்கியா கடந்த 22ஆம் தேதி வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகி விட்டார். இது குறித்து அவரது கணவர் முத்துக்குமார் காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.