இருசக்கர வாகனத்தில் நள்ளிரவில் உதிரி பாகங்களை திருடும் மர்ம நபர்கள்: கோவையில் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு…

இருசக்கர வாகனத்தில் நள்ளிரவில் உதிரி பாகங்களை திருடும் மர்ம நபர்கள்: கோவையில் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு…

கோவை ரத்தினபுரி சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகன உதிரிபாகங்கள் திருட்டப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக போலீசாரும் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கோவை மாணிக்கவாசகம் நகரை சேர்ந்த சரவணன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் வழக்கம் போல் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். மறுநாள் காலையில் பார்த்த பொழுது வாகனம் சேதமடைந்து அதன் உதிரி பாகங்கள் மட்டும் திருடு போய் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது சம்பந்தமாக

சரவணன் ரத்தினபுரி போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் அருகில் உள்ள சிசிடிவிகளையும் ஆய்வு செய்தனர். அந்த காட்சிகளில் இரண்டு நபர்கள், பதிவின் இல்லாத இரு சக்கர வாகனத்தில் வந்து உதிரிபாகங்களை திருடியது தெரியவந்தது.மேலும் திருடிச் சென்றவர்கள் வந்த இருசக்கர வாகனம் சிவானந்த காலனி அண்ணா நகர் பகுதியில் நின்று கொண்டிருந்த நிலையில் அங்கு சென்று விசாரித்த பொழுது சிசிடிவி காட்சிகளில் திருடிச் சென்ற நபரே அங்கு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த நபரை பிடித்த சரவணன் அந்த நபரை

போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் போலீசார் தொடர்ந்து நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்