கோவையில் பெண் யானை மர்ம மரணம்- வனத்துறையினர் விசாரணை..!

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகம் நெல்லித்துறை காப்புக்காடு பகுதியில் வனப்பணியாளர்கள் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது மானார் சரக பகுதியில் பெண் யானை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண் யானைக்கு சுமார் 8 முதல் 10 வயது இருக்கும்.யானையின் உடலில் மேற்பகுதியில் எந்த காயமும் இல்லை.இந்த யானை நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்க படுகிறது. இன்று உடற்கூறாய்வு நடக்கிறது. யானை சாவு குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.