2 குழந்தைகளுடன் தாய் திடீர் மாயம்..!

கோவை அருகே உள்ள சின்னியம்பாளையம் இருகூர் ரோடு கிருஷ்ண கவுண்டர் நகரை சேர்ந்தவர் ஞானதுரை. இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சோனியா (வயது 24) இவர்களுக்கு 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. செல்சியா ( வயது 6)டேனியல் ராஜா (வயது3) ஆகிய 2குழந்தைகள் உள்ளனர்.கடந்த 21ஆம் தேதி சோனியா தனது 2 குழந்தைகளுடன் எங்கோ மாயமாகிவிட்டார்.இதுகுறித்து ஞானதுரை பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.