மருத்துவ பிரதிநிதியிடம் கத்தி முனையில் பணம், செல்போன் பறிப்பு ..!

கோவை போத்தனூர் காந்திநகரை சேர்ந்தவர் செல்வம் .இவரது மகன் ஸ்டீபன் ராஜ் (வயது 29) மருத்துவ பிரதிநிதியாக உள்ளார். இவர் கணபதி ரவீந்திரநாத் தாகூர் வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் அறை எடுத்து தங்கி உள்ளார் .நேற்று இவரது அறைக்குள் 4 பேர் கொண்ட கும்பல் புகுந்தது. அங்கிருந்த ஸ்டீபன் ராஜை கத்தியை காட்டி மிரட்டி தாக்கியது. பின்னர் அவரிடம் இருந்த பணம் ரூ.40 ஆயிரம், செல்போன், புளூடூத் ,பவர் பேங்க் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இது குறித்து ஸ்டீபன்ராஜ் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .போலீசார் மதன் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.