கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கோவை சிறையில் அடைப்பு ..!

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார்,சப் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் ஆகியோர் நேற்று கோல்டு வின்ஸ் – வீரியம்பாளையம் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள் .அப்போது பைக்கில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் 1500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பைக்கும், கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இவர்கள் பீளமேடு பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய இந்த கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது .இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் சூலூர் கரையாம் பாளையத்தைச் சேர்ந்த நந்தகுமார் ( வயது 27) திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பக்கம் உள்ள இலுப்பபட்டியைச் சேர்ந்த சிவமூர்த்தி ( வயது 31) என்பது தெரியவந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.