கோவை பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் பணம்,செல்போன் திருட்டு..!

கோவை போத்தனூர் அருகே உள்ள சீனிவாசன் நகரை சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி மயிலாத்தாள் (வயது 69) இவர் நேற்று காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது இவரது பையில் இருந்த பணம் ரூ.50 ஆயிரம், மற்றும் 4 சேலைகள் , ஒரு செல்போன் ஆகியவற்றை யாரோ திருடி விட்டனர் .இது குறித்து மயிலாத்தாள் காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார்.சப் இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.