மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் முயற்சியில் பல லட்சம் மதிப்பில் நவீன மருத்துவ உபகரணங்கள்..!

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை ஏழை எளிய பொதுமக்கள் சிறப்பான சிகிச்சை பெற மேலும் தரம் உயர்த்துவதற்காக சமூக ஆர்வலரும் சிக்காரம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் அண்ணன் தலைமையில் கல்குவாரி கிரஷர் உரிமையாளர்கள் அசோசியேஷன் மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம் காரமடை ரோட்டரி சங்கம் ஆகியோரின் பெரும் முயற்சியில் பல லட்ச ரூபாய் செலவில் நவீன மருத்துவ உபகரணங்கள் நமக்கு நாமே திட்டத்தில் கட்டிட கட்டுமானங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் ஞானசேகரன் அண்ணனின் முன் முயற்சியால் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ஏழை எளிய மக்கள் சிறப்பாக சிகிச்சை எடுக்க தரமான மருத்துவமனையாக கூடிய விரைவில் மாறும் இன்று முதல் கட்டமாக மருத்துவமனைக்கு தேவையான நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்க பொறுப்பாளர் மருத்துவர் விஜயகிரி அவர்களிடம் நிதி வழங்கப்பட்டது கட்டுமானம் உள்ளிட்ட பணிகளை செய்வதற்காக கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முதல் கட்ட நிதியை ஞானசேகரன் அண்ணன் உள்ளிட்ட கல்குவாரி அசோசியேஷன் பொறுப்பாளர்கள் மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் காரமடை ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முதற்கட்ட நிதியை வழங்க உள்ளார்கள் இதற்காக உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நம்ம மேட்டுப்பாளையம் சமூக நலக் குழுவின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..