கோவையில் மாயமான சிறுமி: பொள்ளாச்சியில் மீட்பு

கோவையில் மாயமான சிறுமி: பொள்ளாச்சியில் மீட்பு

நேற்று ஒண்டிபுதூர் பகுதியில் இருந்து 12 வயது சிறுமி மாயமானதாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் சுதாகரன் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து மாநகர காவல் துறையினர் 6 தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

அதேபோல அனைத்து காவல் நிலையங்களுக்கும் சிறுமியின் புகைப்படம் மற்றும் தகவல்கள் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே சிறுமியை மாவட்ட காவல் துறையினர் மீட்டு உள்ளனர். தொடர்ந்து சிறுமி மாநகர காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு மாநகர காவல் துறையினர் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் சிறுமி போலீசாரிடம் தனது தம்பியை தேடி வந்ததாக தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.