திருச்சியில் 12 தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு அமைச்சர் பாராட்டு.!!

திருச்சி தெற்கு மாவட்டம் திருச்சி கிழக்கு தொகுதியை சார்ந்த, பிளஸ்-2 பொதுத் தேர்வில் திருச்சி மேலப்புதூர் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 600 க்கு 586 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி க. ஸ்ரீவித்யாவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்து திருச்சி பள்ளிகளில் முதலிடம் பிடித்ததற்காக தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும் மாணவியிடம் உயர் கல்வியை சிறப்பான முறையில் தேர்வு செய்து உயர்ந்த நிலைக்கு வர அமைச்சர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் . இந்த நிகழ்வில் மாநகர செயலாளர் மதிவாணன், வட்ட செயலாளர் கருணாநிதி, மாணவியின் தந்தை கணேசன் ஆகியோர் அருகில் உள்ளனர்..