வந்தே பாரத் ரயில் மீது கல்வீசிய 2பேர் கைது.

கோவையிலிருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயில் கடந்து 7ந்தேதி வட கோவைக்கும்- பீளமேடுக்கும் இடையேசென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் பெட்டி மீது கல்வீசப்பட்டது. இதில் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. இது குறித்துகோவை ரயில்வே பாதுகாப்பு படை போலீசில் புகார் செய்யப்பட்டது..சேலம் டிவிஷனல் செக்யூரிட்டி கமிஷனர் சௌரவ் குமார் உத்தரவு பேரில் உதவி செக்யூரிட்டி கமிஷனர் ரத்தீஷ் பாபுமேற்பார்வையில்கோவை ரயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டர்கள்குணசேகரன் ,பாலையா காவலர்கள் ராம்குமார், ராமமூர்த்தி கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் தீவிரமாக துப்பு துலக்கிஇந்தக் கல்வீச்சில் ஈடுபட்ட 2 ஆசாமிகளை நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த சரவணன் ( வயது 28 )கோவை கோவில் மேடு ஜெகதீஸ் (வயது 23) என்பது தெரிய வந்தது .இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.