மருதமலை முருகன் கோவில் மலைப்பாதை 3..50 கோடியில் சீரமைப்பு..!

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இது பக்தர்களால் முருகப் பெருமானின் 7-வது படை வீடாக போற்றப்படுகிறது. இங்கு பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து முருகனை தரிசனம் செய்து வருகிறார்கள். எனவே பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் செய்யப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக மருதமலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு வாகனங்களில் செல்ல மலைப்பாதை உள்ளது. மேலும் மலைக்கு மேல் கூடுதலாக வாகனங்கள் நிறுத்த இடவசதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கோவிலின் மேல் பகுதியில் மண் சரிவு ஏற்படுவதை தடுக்கும் வகையில் தடுப்புச் சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. மலை அடிவாரத்தில் இருந்து கோவில் வரை 17 வளைவுகள் கொண்ட 2.2 கிலோமீட்டர் தூரம் மலை பாதை சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்காக ரூ.3 கோடியே 50 லட்சம் செலவிடப்படுகிறது.இந்த பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.