பல கோடி மதிப்புள்ள பவளப்பாறைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது- வனத்துறையினர் தீவிர விசாரணை..!

கோவை வேடப்பட்டியைச் சேர்ந்தவர் சாம்சன் (வயது43). இவர் கோவை சிறுவாணி
மெயின் ரோட்டில் பழைய நாணயங்கள் மற்றும் பழமையான பொருட்களை வாங்கி
விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
பவளப்பாறைகளை இவரது கடையில் அரிய வகையான தடை செய்யப்பட்ட பவளப்பாறைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. போலீசார் ஒரு குழுவாக சென்று சாம்சன் கடையில் சோதனை செய்தனர் . இந்த சோதனையில் பல கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட 4 பவளப்பாறைகள் மற்றும் பவள பாறைகளை கொண்டு செய்யப்பட்ட 2 மாலைகள் ஆகியவை அங்கு இருந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் சாம்சனை மதுக்கரை வன அலுவலர் சந்தியாவிடம் ஒப்படைத்தனர். அவர் பவளப்பாறைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த சாம்சனை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.
உலகிலேயே அந்தமானில் மட்டும் கிடைக்க கூடிய இந்த பவளப்பாறையின் விலை ஒரு
கிராம் ரூ.2,500 ஆகும். இந்த பவளப்பாறை சாம்சனுக்கு எவ்வாறு கிடைத்தது,
அவர் யாரிடம் வாங்கினார். இதற்கு முன்பு இதுபோன்று பவளப்பாறைகளை அவர்
விற்பனை செய்து உள்ளாரா, எத்தனை ரூபாய்க்கு வாங்கி அவர் விற்றார்.
மேலும் இது சமந்தமாக அவருக்கு வேறு ஏதாவது தொடர்பு உள்ளதா என பல்வேறு
கோணங்களில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.