கருமத்தம்பட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவில்களின் மகா கும்பாபிஷேக விழா..!!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன், மாகாளியம்மன் மற்றும் சித்தி விநாயகர் திருக்கோவில்கள் உள்ளன. கோவில்களில் கடந்த 8 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் இணைந்து கோவில்களை புனரமைத்தனர். பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு வேள்வி மற்றும் யாகசாலை பூஜைகள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்று வந்தது. நிலையில் பல்வேறு நதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, இன்று காலை சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் மற்றும் சௌந்தரராஜ பட்டாச்சாரியார் ஆகியோர் முன்னிலையில் கோபுர கலசங்கள் மற்றும் மூலவர் விக்ரகங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது கோபுரத்துக்கு அருகே தென்பட்ட கருடனை பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்து வழிபட்டனர். இதையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கருமத்தம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கருமத்தம்பட்டி மற்றும் கருமத்தம்பட்டி புதூர் மக்கள் ஏற்பாடு செய்தனர்..